No results found

    கடன் வழங்கும் நிகழ்ச்சி


    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி தலைமையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அறந்தாங்கி கிளையில் உள்ள காவேரி மகளிர் சுய உதவி குழுவிற்கு உயர்ந்தபட்சமாக ரூ.20 லட்சம் குழுக்கடன் வழங்கப்பட்டது. மேலும் தாட்கோ சுய உதவி குழு கடனாக தேக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர்கள், வங்கியின் துணை பதிவாளர் முதன்மை வருவாய் அலுவலர், வங்கியின் பொது மேலாளர் மற்றும் வங்கியின் உதவி ெபாது மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال